செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2020 (14:24 IST)

விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன் - பிரதமர் மோடி

விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன் - பிரதமர் மோடி

விபத்து திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரியுடன் அரசு பேருந்து மோதிய விபத்தில் 20 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில்  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென நம்பிக்கை தெரிவித்து டுவீட் பதிவிட்டுள்ளார்.
 
சேலத்திலிருந்து ஆழப்புலா சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று திருப்பூர் வழியாக வந்து கொண்டிருந்திருக்கிறது. அப்போது எதிரே வந்த கேரள அரசு பேருந்துடன் கண்டெய்னர் லாரி பலமாக மோதியுள்ளது. இதனால் 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலனவர்கள் கேரள மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
 
விபத்துக்கு காரணம் கண்டெய்னர் லாரி டிரைவர் தூங்கியதுதான் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்,  ’தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்தது.இந்தக்  கோர விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். அவர்களுடைய குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.