1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 17 நவம்பர் 2021 (20:21 IST)

அதிக கனமழை எச்சரிக்கை...பொதுமக்களுக்கு மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

நவம்பர் 18 ஆம் தேதி சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பலத்தை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி அனைத்து அலுவலர்களும் அதிக கனமழை பெய்தால் எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 மழை நீர் தேக்கம் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையான தங்களுக்குத் தேவையான குடிநிர், பால், உணவு மற்றும் காற்கறிகள், ஆகியவற்றை 2 நாட்களுக்கு வைத்துக் கொள்ளும்படி மாநகராட்சி அறிவித்துள்ளது.