தொடர்புடைய செய்திகள்
- அதிரப்போகும் சென்னை… விரைவில் டி ராஜேந்தர் இசைக் கச்சேரி?
- மழைநீர் வடிகால் பணிகள்; முடிக்காவிட்டால் ஒப்பந்தம் ரத்து! – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!
- வைகை எக்ஸ்பிரஸ் இனிமேல் இந்த நகரில் நின்று செல்லும்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
- தொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
- அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!
சென்னையில் கனமழை.. திருப்பிவிடப்பட்ட சர்வதேச விமானங்கள்..!
சென்னையில் நேற்று திடீரென கன மழை பெய்ததை அடுத்து விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியதால் பல சர்வதேச மற்றும் உள்ளூர் விமானங்கள் திருச்சி மற்றும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
சென்னை உள்பட ஒன்பது மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில் திடீரென நேற்று இரவு சென்னையில் கன மழை பெய்தது.
இதனால் சென்னையில் உள்ள பல சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஆறு சர்வதேச விமானங்கள் உள்பட 16 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும் இதனால் பயணிகள் அவதியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சற்று முன்னர் விஜயவாடாவில் இருந்து 64 பயணிகளுடன் சென்னை வந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாததால் திருச்சிக்கு அனுப்பப்பட்டது. இதேபோல் ஒரு சில விமானங்கள் திருச்சி மற்றும் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன
Edited by Siva
