1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 3 ஜனவரி 2023 (17:33 IST)

காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற மாணவன்!

பெங்களூரில் உள்ள பிரசிடென்ஸி கல்லூரியில் வளாகத்தில் 19 வயது மாணவி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர் நாடக மா நிலம் பெங்களூரில் உள்ள பிரசிடென்ஸி கல்லூரி வளாகத்தில்  இன்று லயஸ்மிதா (19) என்ற மாணவியை கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்த பவன் கல்யாண் என்ற இளைஞர் தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.

இந்த நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வேறு கல்லூரியில் படிக்கும் மாணவர் லயஸ்மிதாவை கொல்ல வேண்டுமென இக்கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்தது குறிப்பிடத்தக்கது,

மேலும், பவன்கல்யாண் ஒரு தலையாக மாணவியைக் காதலித்து வந்துள்ளார்.  இவரது காதலை மாணவி ஏற்காத நிலையில், இன்று,  மாணவியுடன் பேசும்போது, அவர் தான் கையில் வைத்திருந்த கத்தியால் மாணவியைக் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.