1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 12 ஏப்ரல் 2021 (12:06 IST)

16 வயது சிறுமியை கடத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்ய கடத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜிஞ்சம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் மூர்த்தி மற்றும் காவ்யா. இவர்கள் மூர்த்தியின் முதல் மனைவியின் 16 வயது மகளோடு வாழ்ந்து வந்துள்ளனர். இந்த குடும்பம் திருவண்ணாமலையில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் நாளன்று வாக்குப் பதிவு செய்ய வந்த போது சிறுமி பேருந்து நிலையம் அருகே காணாமல் போயுள்ளார்.

இதையடுத்து  திருவண்ணாமலை மாவட்டம் நாகனூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வரும் சரண்ராஜ் (31)  என்பவர் மேல் சந்தேகம் இருப்பதாக சிறுமியின் பெற்றோர் புகாரளிக்க, போலிஸார் விசாரணை செய்து சரணைக் கைது செய்து சிறுமியை மீட்டுள்ளனர்.