வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 7 ஏப்ரல் 2021 (22:18 IST)

நடிகை குஷ்பு மீது போலீஸார் வழக்குப் பதிவு…

ஆயிரம் விளக்குத்தொகுதி வேட்பாளரும் நடிகையுமான குஷ்பு மீது போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் அரசியல் வாதிகள்,அரசியல்தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் என எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றனர்.

இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்குத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு இன்று வாக்களிக்கச் சென்றபோது, தேர்தல் நடத்தைவிதிமுறைகளை மீறித் தனது காரில் கட்சிக் கொடியுடன் சென்றுள்ளதாக திமுக கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்/. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஆயிரம் விளக்குத்தொகுதியின் பாஜக  வேட்பாளரும் நடிகையுமான குஷ்பு  நேற்று தனது காரில் தாமரை சின்னத்துடன் கூடிய பாஜக கொடியை கட்டிச் சென்றதாக அவர் மீது போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்