டெல்லிக்கு அவசர பயணமாக சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி: திமுக காரணமா?

வியாழன், 3 நவம்பர் 2022 (12:10 IST)
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிஅவசரப் பயணமாக டெல்லி சென்று உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும் என திமுக முடிவு செய்து, கூட்டணி கட்சி தலைவர்களிடம் கையெழுத்து வாங்கி வருகிறது 
 
டிஆர் பாலு தலைமையிலான குழு இந்த கையெழுத்து வேட்டையை நடத்தி வருகிறார்கள் என்பதும் விரைவில் இந்த மனுவை ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களிடம் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இன்று திடீரென கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று உள்ளார். அவர் இரண்டு நாட்கள் டெல்லியில் இருப்பார் என்று கூறப்பட்டு வருகிறது 
 
ஏற்கனவே கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் எதற்காக டெல்லி சென்றார் என்ற பரபரப்பு அரசியல் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

விவசாயக் கடன் தள்ளுபடி!.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..

இந்த கண்றாவியை பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?!.. முக ஸ்டாலின் ஆவேசம்...

ஆதவை சந்தித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சரவணன்!.. தவெகவில் இணைகிறாரா?...

ராஜினாமா செய்த 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைகிறார்களா? திருச்சி கிழக்கு உள்பட நான்கிலும் வெற்றி பெற்றால் 111..

ஆர்டிஇ திட்டத்தில் தனியார் பள்ளிகள் முறைகேடு: தவெக அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments