ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 12 டிசம்பர் 2016 (15:04 IST)

1 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம்: அரசு எச்சரிக்கை

வர்தா புயலால் சென்னை பலத்த காற்று வீசி வருகிறது. தற்போது மழை இல்லை என்றாலும் காறின் வேகம் குறையாமல் உள்ளது. இதனால் பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
நேற்று தீவிரமடைந்த வர்தா புயலால் இன்று காலை முதல் சென்னையில் பலத்த மழையுடன் காற்று வீசுகிறது. தற்போது மழை இல்லை, இருந்தாலும் காற்றின் வேகம் குறையாமல் இருக்கிறது. 
 
இதனால் பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், வெளியே சென்றவர்கள் அருகில் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும், எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.