1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2019 (09:10 IST)

பேனர் விழுந்து உயிரிழந்த பெண்ணின் பகீர் சிசிடிவி காட்சிகள்

குரோம்பேடையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் மீது கட்சி பேனர் விழுந்து லாரி ஏறி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று காலை மோட்டர் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் நடுவே இருந்த கட்சி பேனர் அவர் மீது விழுந்தது. அதில் தடுமாறிய அவரை பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏற்றியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.