வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 11 ஜூன் 2016 (09:56 IST)

காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்ததால் இளம்பெண் தற்கொலை : சென்னையில் பரிதாபம்

தன்னுடைய காதலன் தனக்கு தெரியாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சென்னை அசோக் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னை அசோக் நகர் பகுதியில் வசிப்பவர் ஜான் பிரதீப். இவருக்கும் வெண்ணிலா(24) என்ற பெண்ணுக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அதன்பின் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், வெண்ணிலாவுக்கு, போரூரைச் சேர்ந்த கார்த்திகேயன்(29) என்பவருடன் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது. பின் அது காதலாக மாறியது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் சென்னையின் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
 
எனவே, தனது கணவரிடமிருந்து விரைவில் விவாகரத்து வாங்கிக் கொடுத்து, தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு வெண்ணிலா, கார்த்திகேயனை வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. 
 
ஆனால், கடந்த 6ஆம் தேதி, கார்த்திகேயன் வெண்ணிலாவுக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்த வெண்ணிலா அதிர்ச்சியடைந்தார். தன்னுடைய காதலன் தன்னை ஏமாற்றிவிட்டதை தாங்கிக் கொள்ள முடியாமல், ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
மேலும், அந்த கடிதத்தில் தன்னுடைய மரணத்திற்கு கார்த்திகேயனே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கார்த்திகேயனை போலீசார் கைது புழல் சிறையில் அடைத்தனர்.