வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 29 செப்டம்பர் 2016 (12:13 IST)

தமிழக கிராமத்தில் முதல்முறையாக இலவச வைபை

தமிழகத்திலேயே முதன்முறையாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள கிராமத்தில் இலவச வைபை வசதி சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.


 

 
கோவல் மாவட்டம் மேடுப்பாளையம் அருகே உள்ள குருடம்பாளையம் என்ற கிராமத்தில் இலவச வைபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் கோபுரம் அமைத்து இந்த இலவச வைபை வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த இலவச வைபை 200 மீட்டர் சுற்றளவு தூரத்தில் கிடைக்கும். ஒரே நேரத்தில் முப்பது பேர் அமர்ந்து இலவச இணையதளவசதி பயன்படுத்தும் வகையில் தனியாக அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.
 
கிராமப்புற மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் இந்த இலவச வைபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.