தொடர்புடைய செய்திகள்
- பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் அடாவடி: ரயிலில் ஆயுதங்களுடன் பயணம்; பயணிகளுக்கு அச்சுறுத்தல்!
- பிக்பாஸ் ஜூலியை விருந்தினராக அழைத்து அவமானபடுத்தி அனுப்பிய கல்லூரி மாணவர்கள்!!
- ஓடி ஒளியும் தினகரன்: கைது நடவடிக்கை எப்போது?
- மீண்டும் கைது, மீண்டும் ஜாமீன்: லண்டன் போலீசுக்கே கல்தா கொடுக்கும் விஜய் மல்லையா
- தினகரனை கைது செய்ய தனிப்படை அமைப்பு: விஸ்வரூபம் எடுக்கும் தேச துரோக வழக்கு!
ரயிலில் ஆயுதங்களுடன் ரகளை: காவல்நிலையத்தில் கண்ணீர் சிந்திய மாணவர்கள்
சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் சென்னை புறநகர் ரயிலில் கத்தி, பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஓடும் ரயிலில் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டு வைரலான நிலையில் காவல்துறையினர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்த விசாரணையில் ஃபேஸ்புக் வீடியோவில் உள்ள மாணவர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டனர். முதல்கட்டமாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இன்னும் சில மாணவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறை தரப்பினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 4 மாணவர்கள் போலீசார் முன்னிலையில் கண்ணீர் விட்டு கதறி அழுது தங்களை மன்னித்துவிடும்படி கெஞ்சினர். இனிமேல் வாழ்க்கையில் ரயிலில் வரமாட்டோம் என்றும் இந்த ஒருமுறை தங்களை மன்னித்துவிடும்படி கதறி அழுத காட்சியும் தற்போது வைரலாக பரவி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
