1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 10 ஜூலை 2023 (14:44 IST)

முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் சென்னை அப்பல்லோவில் அனுமதி: என்ன ஆச்சு..!

minister nassar
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி வந்த பிறகு பால்வளத்துறை அமைச்சராக ஆவடி நாசர் செயல்பட்டார். இந்த நிலையில் கடந்த மே மாதம் அமைச்சரவை மாற்றப்பட்ட போது பால்வளத்துறை அமைச்சர் ஆக இருந்த ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முன்னால் அமைச்சர் ஆவடி நாசர் திடீர் உடல்நல குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நலம் குறித்து மருத்துவமனை விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva