1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 ஜனவரி 2023 (12:11 IST)

சொத்து குவிப்பு வழக்கு: ஆ.ராசா சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்

a raja
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளார். 
 
வருமானத்திற்கு அதிகமாக 5.5 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா மீது சிபிஐ கடந்த 2015 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்திருந்தது. 
 
இந்த வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் ஆ ராசா உள்பட 4 பேரும் நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
இதனையடுத்து இன்று எம்எல்ஏ எம்பி க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா இன்று காலை ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran