1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (11:43 IST)

என்கவுன்ட்டர் நடத்திய இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை; பரபரப்பு தகவல்..!

சென்னை கூடுவாஞ்சேரி அருகே போலீசார் என்கவுன்ட்டர் நடத்திய இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
 
போலீசாரின் என்கவுன்ட்டரில் ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் உயிரிழந்துள்ளனர். கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி சாலையில் இந்த  என்கவுன்ட்டர் நடந்துள்ளது;
 
மணிமங்கலத்தில் திமுக பிரமுகரை வெட்டி மாமூல் கேட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் தான் என்கவுண்டரில் உயிரிழந்த சோட்டா வினோத், ரமேஷ் என்பதும் தெரிய வந்துள்ளது.
 
மேலும் சோட்டா வினோத் மீது 10 கொலை வழக்குகள் உட்பட, 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran