1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 7 ஆகஸ்ட் 2021 (18:02 IST)

தமிழகத்தில் முதல்முறையாக கொடைக்கானலில் 100% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை!

கொரோனா மூன்றாம் அலை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. 
 
இதனால் தமிழகத்திலும் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்துள்ளனர். அதன்படி கொடைக்கானல் நகராட்சியில் 100% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக  திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார். இது தமிழகத்திலே முதன்முறையாக நடந்துள்ள சாதனையாக பார்க்கப்படுகிறது. இதே போன்று அனைத்துப்பகுதி மக்களும் பாதுகாப்பை உணர்ந்து தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனாவை ஒழிக்கலாம்.