1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 23 மே 2022 (19:50 IST)

சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 3 டன் கெட்டு போன இறைச்சி பறிமுதல்!

meats
சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 3 டன் கெட்டு போன இறைச்சி பறிமுதல்!
சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 3 டன் கெட்டுப்போன இறைச்சியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு கெட்டுப்போன இறைச்சி கொண்டு வரப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து சோதனை செய்தனர் 
 
அப்போது வேன் ஒன்றில் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 3 டன் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த இறைச்சி தனியார் உணவு நிறுவனத்திற்கு கொண்டு போனதாக கூறப்படும் நிலையில் அடுத்த மூன்று டன் கெட்டுப்போன இறைச்சிக்கு அந்த நிறுவனம் தான் பதில் அளிக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது