தொடர்புடைய செய்திகள்
- காவல் நிலையத்தில் மரணம்: வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு..!
- விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடலுக்கு பிரேத பரிசோதனை முடிந்தது...
- வீட்டியிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் உயிரிழப்பு
- ’நான் கடவுள்’ படத்தில் நடித்த நடிகர் ஆதரவற்ற நிலையில் மரணம்.. சொந்த ஊருக்கு செல்லும் உடல்..!
- மாயனூர் காவிரி ஆற்றில் மாணவிகள் உயிரிழந்த விவகாரம், அவசர, அவசரமாக பிரேத பரிசோதனை ஏன் ? பாஜக கேள்வி ?
மர்மமான முறையில் காட்டு யானை பலி.! வனத்துறை அதிகாரிகள் விசாரணை..!!
மேட்டுப்பாளையம் அருகே மூலையூர் வனப்பகுதியில் மர்மமான முறையில் பெண் காட்டு யானை உயிரிழந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரக பகுதியான மூலையூர் பகுதியில் விவசாய நிலத்தை ஒட்டிய வனப்பகுதி அமைந்துள்ளது. அடிக்கடி காட்டு யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் மூலையூர் கிராமத்தில் விவசாய நிலத்தை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதுகுறித்து விவசாயிகள், சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில் அங்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்த பெண் காட்டு யானைக்கு 5 வயது இருக்கும் என தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே யானையின் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.
