1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (21:19 IST)

’பாவம்’ - பிணமாக நடிக்கும் விவசாயிகள்!

தமிழகத்திற்கு வந்து சேர வேண்டிய 50 டிஎம்சி காவிரி நீர் வராததால், விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.


 


அதனால், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், கவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து, 6 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

போராட்டத்தின் நான்காவது நாளான இன்று, விவசாயிகள், மண்வெட்டி, அரிவாள் மற்றும் பானைகளை கயிற்றால் கட்டி தொங்க விட்டு, அரை நிர்வாணத்தில், பிணம் போல நடித்து, நூதன போராட்டம் செய்தனர். அப்போது விவசாயி ஒருவர் சோகமாக ஒப்பாரி பாடினார். இது காண்போரை சோகத்தில் ஆழ்தியது.