தொடர்புடைய செய்திகள்
- சென்னை உள்பட 19 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக நாம் தமிழர் வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு..!
- அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்தது தவறான முடிவு.. சசிகலா கருத்து..!
- ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தில் 58 வேட்பாளர்கள்.. இன்று வேட்புமனு பரிசீலனை..!
- போட்டியும் இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை: ஈரோடு இடைத்தேர்தல் குறித்து தவெக அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. 8 வேட்பாளர்கள் வாபஸ்.. எத்தனை பேர் போட்டி?
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் சமீபத்தில் முடிவடைந்தது.
திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் மட்டுமே இந்த தேர்தலில் போட்டியிடும் நிலையில் முக்கிய எதிர்கட்சிகளான பாஜக, அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. திமுக சார்பில் விசி சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான தேதி முடிவடைந்த நிலையில் 8 சுயேச்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இதையடுத்து தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 47 பேர் களத்தில் உள்ளனர் என்று இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
Edited by Mahendran
