1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (12:24 IST)

ஒரே ஒரு மாநிலங்களவை இடத்திற்காக தேர்தல்! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரேஒரு மாநிலங்களவை இடத்திற்காக தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்த முகமதுஜான் உயிரிழந்த நிலையில் அவருடைய மாநிலங்களவை உறுப்பினருக்கான இடம் காலியாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த இடத்தை நிரப்ப செப்டம்பர் 13ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்பு மனுதாக்கல் ஆகஸ்டு 24 தொடங்கி ஆகஸ்டு 31ல் முடிவடையும். வேட்புமனுக்கள் செம்பம்பர் 1ல் சரி பார்க்கப்படும். வேட்புமனுக்களை திரும்ப பெற செப்டம்பர் 3 வரை அவகாசம் உண்டு. செப்டம்பர் 13ம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்குகள் அன்றைய தினம் மாலையே எண்ணப்படும் என கூறப்பட்டுள்ளது.