தொடர்புடைய செய்திகள்
- அமலாக்கத்துறை சோதனை பற்றி திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கட்சிகளை உடைத்து அனைவரையும் பாஜக பயமுறுத்த முயற்சிக்கிறது.- முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம்
- ’அப்படியா.. எனக்கு தெரியாது’: பொன்முடி வீட்டின் சோதனை குறித்து துரைமுருகன் பதில்..!
- அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு 15 பர்கர்கள் வருகை.. அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆர்டர் செய்தார்களா?
- அமைச்சர் பொன்முடியை சந்திக்க எங்களை அனுமதிக்கவில்லை: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு..!
போலி சாவி தயாரித்து பீரோவை திறந்தார்களா அமலாக்கத்துறை அதிகாரிகள்.. பொன்முடி வீட்டில் பரபரப்பு..!
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் பொன்முடி வீட்டில் உள்ள பீரோ சாவி கிடைக்காததால் போலீஸ் சாவி தயாரித்து பீரோவை திறந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்த நிலையில் பீரோவை சோதனை செய்ய வேண்டும் அதன் சாவி வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது.
சாவி இல்லாததால் நீண்ட நேரம் அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அதன் பிறகு போலீஸ் சாவி தயாரிக்கும் நபரை வரவழைத்து பீரோவுக்கு போலி சாவியை தயாரித்து திறந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran
