1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (13:01 IST)

காவிரி பிரச்னை தொடர்பான உச்சநீதிமன்றத்தில் வழக்கு: அமைச்சர் துரைமுருகன்

காவிரி நீர் பிரச்சனை தொடர்பான உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வரும் 21ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
 
காவிரி நதிநீர் ஆணையம் கூறிய கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை என்றும் கர்நாடகா அரசு அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டுவதால் எந்த அழுத்தமும் ஏற்படாது என்று அவர் தெரிவித்தார்.  
 
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து தமிழக அரசு காவிரி நதிநீர் விவகாரத்தில் அடுத்த கட்டத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார் 
 
உச்சநீதிமன்றத்தில் காவிரி பிரச்சனை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் இந்த வழக்கை எதிர்கொள்ள கர்நாடக அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran