1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2016 (16:03 IST)

வீட்டிற்கு வந்த பாம்பை புடை சூழ எதிர்த்து கொன்ற பாசமுள்ள நாய் : வீடியோ

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் அருகில் ஒரு நல்ல பாம்பு வந்தது.


 

 
அந்த பாம்பு வருவதை, அந்த வீட்டில் வளரும் நாய் பார்த்துவிட்டது. உடனே பாம்பை குலைக்க ஆரம்பிக்க, பாம்போ படமெடுத்து ஆடியது. அந்த நாயோடு அதன் சகாக்களான இரண்டு நாய்களும் சேர்ந்து கொண்டு, அந்த பாம்பை அங்கிருந்து செல்ல அனுமதிக்கவில்லை. 
 
அதன்பின், அந்த நாய் அந்த பாம்பை கடித்துக் கொன்று விட்டது. நாயிடமிருந்து உயிர் தப்பிக்க, அந்த பாம்பு எவ்வளவு முயன்றும் முடியவில்லை. இதுவரை மொத்தம் 7 பாம்புகளை அந்த நாய் கொன்றுள்ளதாம். 
 
அந்த நாய் அங்கிருக்கும் வரை, இங்கு யாரும் நெருங்க முடியாது என்று அந்த நாயின் உரிமையாளர் தெரிவித்தார்.