வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (15:56 IST)

ஆளுனர் இதுவரை 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை: மக்களவையில் கனிமொழி பேச்சு

kanimozhi
ஆளுநர் இதுவரை 20 மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என மக்களவையில் திமுக எம்பி கனிமொழி காரசாரமாக பேசி உள்ளார்.
 
மத்திய அரசு சர்வாதிகாரப் போக்கை நோக்கி நகர்கிறது என்றும் இந்தியாவில் வேலை இல்லாத திண்டாட்டம் அதிகம் உள்ளது என்றும் கனிமொழி எம்பி வீசினார். 
 
மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுவரை நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும் கூட்டாச்சி முறையையும் கற்பிக்க வேண்டும் என்றும் அவர் ஆவேசமாக பேசினார். 
 
மேலும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுடன் மோதல் போக்கை கையாளுகின்றனர் என்றும் மாநிலங்களின் நலன் உரிமையை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran