தொடர்புடைய செய்திகள்
- வெடிபொருள் தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் மற்றும் நிதியுதவி
- தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
- உதயநிதி பொறுப்பேற்ற பின் விளையாட்டுத்துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளது: முதல்வர் பெருமிதம்..!
- மணிப்பூர் பழங்குடி பெண்களுக்கு கொடூரம்...7 வது குற்றவாளி கைது!
- மணிப்பூரில் மீண்டும் அமைதியை கொண்டு வருவோம்- ராகுல் காந்தி
''டெல்லி அதிகாரம்''- மத்திய பாஜக அரசு சட்டம் நிறைவேற்றம்
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உள்ளது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, சில சட்ட திருத்தங்கள் மேற்கொண்டு துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் என்று சட்டம் இயற்றியது.
இந்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இதற்கான சட்ட மசோதாவை இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், மாநிலங்களவையிலும் இச்சட்டம் நிறைவேற தேசிய ஜன நாயக கூட்டணி அரசுக்கு புஜூ ஜனதா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையுள்ளது.
