தொடர்புடைய செய்திகள்
- கொரோனா நோய் தொற்று: போர்க்கால நடவடிக்கை எடுக்க விஜயகாந்த் வேண்டுகோள்!
- 2.94 கோடி பேருக்கு கொரோனா.. 3 கோடியை நெருங்கும் பாதிப்பு – இந்திய நிலவரம்
- இந்தியாவில் கொரோனா பலி 42 லட்சமா? – அமெரிக்க பத்திரிக்கைக்கு ஹர்ஷவர்தன் கண்டனம்!
- முதுமலை யானைகளுக்கு கொரோனா பரிசோதனை! – முடிவுகள் என்ன?
- சீனாவில் வௌவாலில் இருந்து புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!
டெல்லியில் பேருந்துகள் இயங்க முதல்வர் உத்தரவு: தமிழகத்தில் எப்போது?
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்த நிலையில் பல்வேறு தளர்வுகளை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் அறிவித்து வந்தார் என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி டெல்லியில் பேருந்துகளை இயக்க அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார் இதனையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
டெல்லியில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்டோ, ரிக்ஷா, இ டாக்ஸிகள் 2 பயணிகளுடன் இயங்க அனுமதி என்றும் முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனை அடுத்து நாளை முதல் டெல்லியில் பேருந்துகள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
டெல்லியை போலவே தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து விரைவில் தமிழகத்திலும் பேருந்து போக்குவரத்து தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
