தொடர்புடைய செய்திகள்
- படகுகள், ஹெலிகாப்டர்கள் உடனடியாக வேண்டும்: அமித்ஷாவிடம் வேண்டுகோள் வைத்த நிர்மலா சீதாராமன்..!
- நெல்லை, தூத்துக்குடி உட்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையம்..!
- 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
- மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகளை தமிழ்நாடு அரசு துரிதப்படுத்த வேண்டும்! - சீமான்
- கனமழை மற்றும் பெருவெள்ளம்: நெல்லையில் துண்டிக்கப்பட்ட சாலைகள் விவரங்கள்..!
தாமிரபரணி கரையோர சாலைகள் சேதம்: தேசிய பேரிடர் மீட்பு படை செல்வதில் தாமதம்
தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள சாலைகளில் தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ளதால் ஸ்ரீவைகுண்டம் நோக்கி புறப்பட்ட இரு தேசிய பேரிடர் மீட்பு குழு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள சாலைகளில் சுமார் 9 கி.மீ பயணிக்க வேண்டும் எனவும் சாலைகள் கடும் சேதம் அடைந்திருப்பதல் அதில் பயணிப்பது கடும் சவாலாக உள்ளதாகவும் என்.டி.ஆர்.எஃப் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை சென்றடைய 5 என்டிஆர்எஃப் குழுக்கள் தீவிர முயற்சி செய்து வருவதாகவும் வாகனத்தில் செல்ல முடியாததால் படகு மூலம் ஸ்ரீவைகுண்டம் செல்ல முயற்சி செய்து வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
எப்படி இருந்தாலும் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் ரயிலில் சிக்கி உள்ள பயணிகள் முழு அளவில் மீட்கப்படுவார்கள் என்றும் முதல் கட்டமாக அவர்களுக்கு உணவு தண்ணீர் கொடுத்த பின்னர் முழுமையாக மீட்கப்படுவார்கள் என்றும் தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.
Edited by Siva
