1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (12:42 IST)

காற்றழுத்த தாழ்வு எதிரொலி: சென்னை உள்பட 8 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை!

cyclone
காற்றழுத்த தாழ்வு எதிரொலியாக சென்னை உள்பட 8 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் தற்போது திடீரென வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
இதனையடுத்து சென்னை உள்பட 8 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி  ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன