1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 ஜனவரி 2023 (16:27 IST)

மதுபோதையில் பாம்பை வைத்து ஆட்டம்! – புத்தாண்டில் நடந்த சோகம்!

கடலூரில் புத்தாண்டை கொண்டாட மது அருந்திய நபர் பாம்பை பிடித்து விளையாடியபோது கடித்ததால் உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்தவர் மணிகண்டன். நேற்று இரவு புத்தாண்டை கொண்டாட மணிகண்டன் தன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னட் அங்கே திரிந்த கண்ணாடி விரியன் பாம்பை பிடித்த மணிகண்டன், புத்தாண்டு பரிசு என அனைவரிடமும் காட்டி பயமுறுத்தியுள்ளார். அப்போது பாம்பு எதிர்பாராத விதமாக மணிகண்டனை கடித்துள்ளது.

இதனால் மணிகண்டன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கூடவே அவரை கடித்த பாம்பையும் கவரில் போட்டு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மணிகண்டன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது மருத்துவமனையில் தெரிய வந்துள்ளது. பாம்பு இருந்த கவரை மருத்துவமனை ஊழியர் பிரித்தபோது பாம்பு அவரையும் கடித்துள்ளது.

இதனால் உடனடியாக அந்த இடத்திலேயே பாம்பை மக்கள் அடித்து கொன்ற நிலையில் மருத்துவமனை ஊழியருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K