வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (17:17 IST)

தமிழகம் வந்த கொரோனா தடுப்பூசி; பற்றாக்குறையை சமாளிக்க தீவிரம்!

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் இன்று கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் முதல்கட்ட டோஸ் செலுத்த கூட தடுப்பூசிகள் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கூடுதல் தடுப்பூசி வழங்க மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த வார இறுதியில் தடுப்பூசிகள் தமிழகம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் புனேவிலிருந்து விமானம் மூலமாக 3 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகம் இன்று வந்து சேர்ந்தது. சென்னை விமான நிலையம் வந்தடைந்த இந்த தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பாதிப்பு நிலவரம் சார்ந்து பகிர்ந்தளிக்கப்படும் என கூறப்படுகிறது.