தொடர்புடைய செய்திகள்
- இனி கேரளாவிலிருந்து வர பிசிஆர் சான்றிதழ் கட்டாயம்! – தமிழக அரசு உத்தரவு!
- இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! – இன்றைய நிலவரம்
- டெல்டா வைரஸ் 1000 மடங்கு ஆபத்தானது: அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை!
- 19.85 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- சென்னையில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
சென்னையில் 3ஆவது அலை வரும்: மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி
பொதுமக்கள் கவனக்குறைவாக இருந்தால் மூன்றாவது அலை சென்னைக்கு வரும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அவர்கள் தெரிவித்துள்ளார்
சென்னையில் புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு வந்தது என்றும் அதற்கான காரண குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். மேலும் தவிர்க்க முடியாத காரணத்தினால் 9 இடங்களில் வணிக பகுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் பொதுமக்கள் கவனமாக கவனக்குறைவாக இருந்தால் மூன்றாவது அலை கண்டிப்பாக வந்துவிடும் என்றும் கூறிய அவர் திருமண நிகழ்வுகளில் சமூக இடைவெளி என்று அருகருகே அமர்ந்து சாப்பிடக்கூடாது என்றும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்
