எங்கள் கட்சிக்கு அழைப்பில்லை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு எதிராக ஐகோர்ட்டில் மனு..!
அனைத்து கட்சி கூட்டத்திற்கு எங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ரவி மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், அனைத்து கட்சி கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில், எந்த தேர்தலிலும் களம் காணாத பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது பாரபட்சமானது என்றும் ரவி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்படும் விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். நாளை மறுநாள், மார்ச் 5ஆம் தேதி, இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
பாஜக, தமிழக வெற்றிக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தங்களுடைய கட்சிக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை என தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி மனு தாக்கல் செய்திருப்பது கவனத்தைக் கேட்கிறது.
Edited by Mahendran