வெள்ளி, 27 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2024 (18:25 IST)

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் நடைபெறும் கட்டுமான பணிகள் அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி ஆய்வு.....

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும்  அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட வார்டுஎண் 39, 40 ஆகிய வார்டுகளுக்கு இடைப்பட்ட பாலாஜிநகர், நியூடவுன் ஆகிய பகுதிகளை இணைக்ககூடிய  புதிய பாலம்  கவுறு வாய்க்காலில் ரூ. 1 கோடியே 31 லட்சம் மதிப்பிலான கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
 
இந்தப் பாலம் திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி செல்லும் மாணவர்கள் ஒரு வழிப் பாதையாக பைபாஸ் சலையை பயன்படுத்தி வருகின்றனர் இதனால் விபத்துக்கள் அதிகமாக ஏற்படுகின்றன  விபத்துக்களை தவிப்பதற்காக இப்பாலம் கட்டப்படுகிறது.
 
இதனால் அதிக விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.