1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Congress protest against Perarivalan arrest

பேரறிவாளன் விடுதலை; வாயில் வெள்ளைத்துணியுடன் காங்கிரஸ் போராட்டம்!

Congress
ராஜீவ் காந்தில் கொலை வழக்கில் சிறையிலிருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் தமிழகம் முழுவதும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் பேரறிவாளன். பின்னர் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பின்னர் தற்போது உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டி, விடுதலை செய்யப்பட்டாலும் செய்த குற்றம் செய்ததுதான் என கருத்து தெரிவித்துள்ளதுடன், இன்று பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் வாயை வெள்ளை துணியால் மூடிக்கொண்டு அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள நேரு சிலை முன்பாகவும் காங்கிரஸார் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
Monkey pox - எப்படி பரவுகிறது? அறிகுறிகள் என்ன?