தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தின் அக்.,மாத ஜிஎஸ்டி வருவாய் உயர்வு- மத்திய அமைச்சகம்
- வடகிழக்குப் பருவமழை : பல்துறை மண்டக்குழு அமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
- செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் -பாஜக கோரிக்கை
- வடகிழக்கு பருவமழை குறித்த நடவடிக்கைகள்: முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!
- தமிழகம் வருகிறார் மம்தா பானர்ஜி: முதல்வர் ஸ்டாலினுடன் முக்கிய பேச்சுவார்த்தை!
ராஜராஜ சோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் ஸ்டாலின்
ராஜராஜசோழன் இந்துவா அல்லது சைவரா என்ற சர்ச்சை கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருந்த நிலையில் தற்போது மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த நாளை நவம்பர் 3ஆம் தேதி ஆண்டுதோறும் விழாவாகக் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது
இந்த நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும் இனி வரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும்
மேலும் தஞ்சாவூரில் மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
