1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2023 (14:45 IST)

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம்.. சித்ராவின் தந்தை புதிய மனு தாக்கல்..!

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
சித்ராவின் தந்தை காமராஜ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மாற்றி விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சித்ராவின் தந்தை இந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
விசாரணையை இழுத்து அடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே ஹேமந்த் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருவதாகவும் சித்ராவின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
 
முதுமை காரணமாக வழக்கு விசாரணைக்காக ஒவ்வொரு வாய்தாவின் போது தன்னால் திருவள்ளூர் சென்று வர சிரமமாக இருப்பதாகவும் சித்ராவின் தந்தை தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு மீதானவிசாரணை விரைவில் நடைபெற உள்ளது
 
Edited by Mahendran