1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 3 ஜூலை 2019 (17:47 IST)

முதல்வரை புகழ்ந்து பேசிய எதிர்க் கட்சி துணைத்தலைவர் !

சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமை பேசியதைப் பார்து நான் அசந்துபோய்விட்டதாக திமுக பொருளாளர் மற்றும் சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டசபையில் கேள்வி நேரம் முடிவுற்றதாக சபாநாயகர் தெரிவித்தார். அதற்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் : நேற்று கேள்வி நேரத்தைக் குறைத்துக் கொள்ளலாமா என்று கேட்டேன். அதைக் குறைக்கமுடியாது என்று கூறினீர்கள்..அதை ஏற்றுக்கொண்டேன்.
 
இந்த ஆட்சிக்கு முன்னால்  இருந்த ஆட்சியில் கேள்வி நேரத்தின் போது,பொதுப்பணித்துறை , காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை சம்பந்தமாக கேள்விகள் கட்டாயம் இடம்பெறும். சமீபகாலமாக இத்துறையில் கேள்விகளே எழுவதில்லை.
 
இந்தக் கேள்விகளுக்கு முதல்வர் பதில் சொல்ல முடியாதவர் அல்ல. முதல்வர் சிறப்பாக பதில் சொல்லக்கூடியவர். அவரது பதிலைக் கேட்டு நாம் அசந்துபோயுள்ளேன்.அதனால் நாளை பொதுப்பணித்துறை ,காவல்துறை , தொடர்பான கேள்விகள் இடம்பெறும் என எதிர்பார்க்கிறேன் இவ்வாறு தெரிவித்தார்.
 
இதனைத்தொடர்ந்து பேசிய துணைமுதல்வர் பன்னீர் செல்வம், முதல்வர் பொறுப்பேற்றுள்ள அனைத்து  துறைகளிலும் நீங்கள் கேட்டாலும் அது குறித்து பதில் அளிக்க தயாராகவே உள்ளார் என்று தெரிவித்தார்.