Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

Written By Mahendran
Updated: வெள்ளி, 10 மார்ச் 2023 (14:56 IST)
சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அதனை ஈடு கட்டும் வகையில் கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. 
 
இந்த நிலையில் நாளை அதாவது மார்ச் 11ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு திங்கட்கிழமை பாட வேலையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி பள்ளிகள் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 

 
மேலும் மார்ச் 13ஆம் தேதி அன்று தொடங்கப்பட உள்ள மேல்நிலைப் பொது தேர்வுக்கான அனைத்து தேர்வு மைய தயாரிப்பு பணிகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டதை உறுதி செய்யுமாறு அனைத்து உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!.. அணையின் நீர்மட்டம் 74.01 அடியாக உயர்வு..

உதயநிதியின் கேள்விக்கு விஜய் பதில் சொல்லமாட்டார்!. தீர்மானம் கொண்டுவரும் தவெக?..

Gold Price: மீண்டும் விலை ஏறிய தங்கம்!. இன்றைய அப்டேட்!..

உங்களை ஒரு தலைவன் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்பட வேண்டும்.. உதயநிதி குறித்து குஷ்பு...

2 மணி நேரம் டாய்லெட்டில் இருந்து புரட்சி செய்தவர் உதயநிதி: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

அடுத்த கட்டுரையில்
Show comments