தொடர்புடைய செய்திகள்
- ஆவின் பொருட்களின் விலை திடீர் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
- உயிரிழந்த தன் ரசிகர்களின் குடும்பத்திற்கு உதவுவதாக சூர்யா உறுதி!
- மாரத்தானில் ஓடிய மாணவர் மாரடைப்பால் பலி! – மதுரையில் அதிர்ச்சி!
- வித்தியசமாக போட்டோஷூட் எடுத்து பகிர்ந்த அமலா பால்!
- நடிகை அமலா பாலின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!
மதுபானங்களை பாட்டிலில் விற்கும்போது ஆவின் பாலை விற்க முடியாது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
மதுபானங்களை பாட்டிலில் விற்கும்போது ஆவின் பாலை பாட்டிலில் ஏன் விற்க முடியாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆவின் பாலை கண்ணாடி பாட்டிலில் விற்பது குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் பால் விநியோகத்தை பாட்டிலுக்கு மாற்ற மக்களிடம் சரியான ஆதரவு கிடைக்கவில்லை என ஆவின் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஆவின் அறிக்கையால் நீதிபதிகள் அதிருப்தி அடைந்து சரமாரியாக கேள்வி எழுப்பியதோடு, புதிய அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.
மதுபானங்களை பாட்டிலில் விற்கும்போது ஆவின் பாலை பாட்டிலில் விற்க முடியாதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மதுபோதையில் பாட்டிலை கையாளும்போது, பொதுமக்களால் கையாள முடியாதா? என்றும் கூறினர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
