1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 மே 2020 (09:24 IST)

சென்னை கொரோனா வார்டிலிருந்து நபர் தப்பியோட்டம்! – தேடி வரும் போலீஸார்!

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் கொரோனா பாதிப்புகள் இரண்டாயிரத்தையும் தாண்டியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு உள்ள 60 வயது முதியவர் ஒருவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தடுப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு யாருக்கும் தெரியாமல் அவர் மருத்துவமனையிலிருந்து தப்பியுள்ளார்.

மருத்துவமனையிலிருது மாயமான அந்த நபரை தேடி பிடிக்க சுகாதார துறை அதிகாரிகள், போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.