1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 டிசம்பர் 2022 (08:13 IST)

சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி நடக்கும் தேதி அறிவிப்பு!

book
சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
46வது புத்தகக் கண்காட்சியை வரும் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 22 ஆம் தேதி முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
புத்தக கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அரங்குகளில் தங்களது புத்தகங்களை இருப்பார்கள் என்றும் இந்த ஆண்டு அதிக அளவில் புத்தகங்கள் விற்பனையாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
சென்னையில் இந்த புத்தக கண்காட்சியில் மூன்று நாட்கள் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்றும் இதற்காக ஏசி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஜனவரி 6ஆம் தேதி புத்தக கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் என்றும் இந்த புத்தகக் காட்சியை ஜனவரி 22ஆம் தேதி முடிவடையும் என்றும் குறிப்பிடப்பட்டது 
 
Edited by Siva