1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 16 செப்டம்பர் 2021 (15:38 IST)

கொரோனாவால் இறந்தோருக்கு சான்றிதழ் ! சுகாதாரத்துறை அறிவிப்பு

கொரொனாவால் இறந்தவர்களுக்கு  உரிய பரிசீலனைக்குப் பின் இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ளதாவது:

இந்தியாவில் கொரொனா 2 வது அலை பரவி வரும் நிலையில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழில் இறப்பு குறித்துஅ வர்களின் குடும்பத்தாருக்கு திருப்தி அளிக்கவில்லை எனில், அங்குள்ள மாவட்ட ஆட்சித்தலைவருக்கு ஒரு விண்ணப்பம் அளித்து, மாவட்ட அளவிலான குழுவினரின் பரிசீலனைக்குப் பிறகு கொரொனாவால் இறந்தவர் குறித்த உரிய சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.