1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cbi summon againt to tvk leader vijay

கரூர் சம்பவம்!. விஜய்க்கு மீண்டும் சம்மன்!.. விடாது கருப்பு!..

vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் 27ம் தேதி கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க பல ஆயிரம் மக்கள் கூடியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்து சில மாதங்களாக விசாரணை நடத்தி வந்தனர்.. மேலும் கரூர் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் தவெகவின் முக்கிய நிர்வாகிகளை டெல்லிக்கு நேரில் அழைத்து அவர்கள் விசாரணை நடத்தினார்கள்..

அதேபோல், விஜய்க்கும் சிபிஐ சம்மன் அனுப்பியது. அதை ஏற்று விஜய் ஜனவரி 6ம் தேதி டெல்லி சென்று சிபிஐ அதிகார்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னார்.. அதன்பின் சில நாட்களில் மீண்டும் அவர் டெல்லி சென்று இரண்டாவது நாளாக சிபிஐ விசாரணையில் கலந்து கொண்டார்..

தற்போது விஜய் அரசியல் வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில்தான், மார்ச் 10ம் தேதியான நாளை விஜய் டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. இது தவெக தொண்டர்களையும், விஜய் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
சிபிஐ விசாரணையை தவிர்க்கும் விஜய்!.. டெல்லிக்கு போக மாட்டார்!.. பரபர தகவல்...