விஜயை பிளாக் மெயில் பண்ண முடியாது!.. நடக்காது!.. எஸ்.ஏ.சி வீடியோ வைரல்..
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே பல சிக்கல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார்.. முதலில் அவரை பனையூர் பண்ணையார்,, பனையூர் அரசியல்வாதி,, பனையூரை விட்டு வெளியே வர மாட்டார்,, அவர் மக்களை சந்திப்பதில்லை என்றெல்லாம் பேசினார்கள்,,
அதன்பின் அவர் கரூருக்கு சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த போது இதற்கு விஜய்தான் முக்கிய காரணம் என பல அரசியல் கட்சிகளும் அவரை கடுமையாக விமர்சித்தனர்.
அதன்பின் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சந்திக்க நேரில் செல்லவில்லை.. இவரெல்லாம் ஒரு அரசியல் தலைவரா? என அவரை திட்டினார்கள். தற்போது விஜய் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளையும் விமர்சிக்க துவங்கிவிட்ட நிலையில் அந்த இரு கட்சிகளும் விஜயை மிகவும் கமையாக விமர்சித்து வருகிறார்கள்..
ஒருபக்கம் கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு விஜய் இரண்டு முறை டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். ஒருபக்கம் அவரின் ஜனநாயகன் திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை.. இதற்கு பின்னணியிலும் அரசியல் காரணமே இருப்பதாக பலரும் நம்புகிறார்கள்.
இந்நிலையில்தான் இயக்குனரும் விஜயின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.. அதில் பேசும் எஸ்.ஏ.சி. விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு சென்று விட்டார்.. அவர் இப்போது முழு அரசியல்வாதியாக மாறிவிட்டார்.. எனவே படத்தை காட்டி அவரை பிளாக்மெயில் செய்ய முடியாது என பேசியிருக்கிறார்..
விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அதோடு விஜயை திரிஷாவோடு தொடர்பு படுத்தி செய்திகள் வரும் நிலையில் எஸ்.ஏ.சி முன்பு பேசிய வீடியோவை தற்போது விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்..