விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற 3 பேர் பரிதாப பலி

Updated: ஞாயிறு, 20 மே 2018 (09:12 IST)
விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற 3 பேர் மற்றொரு விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இன்று காலை பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயமடைந்தனர்.
 
இதனையடுத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்க ஒரு குழு சென்றது. அப்போது மற்றொரு பேருந்து மோதியதில் மீட்க சென்ற 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர் இரு விபத்துகளில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்றவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

எதுக்கு வந்தீங்க?!.. சீன் போடப்போன ஜூலி!.. விரட்டி அடித்த போராட்டக்குழு!..

இந்த ரெண்டையும் செய்யணும்!.. போராட்டம் தொடரும்.. CJP அபிஜீத் தீப்கே திட்டவட்டம்!..

திமுக ஆட்சியில் எங்க போனீங்க?.... ரஞ்சித்.. அமீர்!.. வெற்றிமாறனை பொளக்கும் நெட்டிசன்ஸ்!..

அரசியலில் இருந்து விலகுகிறேன்!. இனிமே அன்புமணி மட்டும்தான்!.. ராமதாஸ் அறிவிப்பு..

பணிந்தது பாஜக!.. தர்மேந்திர பிரதான் ராஜினாமா!.. இளைஞர்களின் போராட்டம் வெற்றி...

அடுத்த கட்டுரையில்
Show comments