1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 28 ஜனவரி 2020 (16:55 IST)

சம்பள பாக்கி: போராட்டத்தில் இறங்கிய BSNL ஊழியர்கள்!

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் சம்பள பாக்கியை திரும்பி கொடுக்கும்படி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 
 
தமிழகத்தில் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் 5,000 பேர் ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை சம்பளம் வாங்குவபவ்ர்கள் உள்ளனர், ஆனால், இவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ஒரு நபருக்கே கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரை சம்பள பாக்கி வைத்துள்ளனர். 
 
அதேபோல நிரந்தர ஊழியர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் இன்னும் கிடைக்கவில்லை.  இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் 30% பணத்தை பிப்ரவரி 20-க்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
 
இருப்பினும் இன்று பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த போக்கை எதிர்த்து  ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.