1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 2 ஏப்ரல் 2022 (08:39 IST)

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Y பிரிவு பாதுகாப்பு!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Y பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது என தெரியவந்துள்ளது. 

 
அண்ணாமலைக்கு மாநில அரசால் ’ஒய் பிளஸ்’ பிரிவு வழங்கப்பட்டு அது கடந்த சில மாதங்களுக்கு முன் அது ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர் அவருக்கு சில கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. எனவே அண்ணாமலைக்கு இருக்கக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தலை குறித்து அறிக்கை தயாரித்து நுண்ணறிவு பிரிவினர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளனர். 
 
இதன் அடிப்படையில் தற்போது அண்ணாமலைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Y பிரிவு பாதுகாப்பின் கீழ் அண்ணாமலைக்கு 2 தனிப்பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 11 பேர் கொண்ட ஆயுதமேந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் மாநில போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவார்கள் என தெரிகிறது.