தொடர்புடைய செய்திகள்
- டெல்லியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி - நீட் விலக்கு மசோதா, பாதுகாப்பு குளறுபடி விவகாரமா?
- குற்றங்கள் இல்லாத தமிழகம் உருவாக இது ஒன்றுதான் வழி: அன்புமணி ராமதாஸ்!
- மருத்துவர் பட்டங்களை திருப்பி அளிப்போம்: குடியரசுத் தலைவருக்கு கூட்டாக கடிதம்!
- ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் நீட் விலக்கு மசோதா! – ஆளுனர் திடீர் முடிவு?
- ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை: முதல்வருக்கு அண்ணாமலை கோரிக்கை
'நீட்' விலக்கு கேட்பது அவமானம்: முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழகம் மட்டுமே கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
மேலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டசபையில் மசோதா இயற்றப்பட்டது என்பதும், அந்த மசோதா கவர்னருக்கு அனுப்பப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நீட் விலக்கு குறித்து முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியபோது நீட் விலக்கு கேட்பது தமிழக மாணவர்களுக்கு அவமானம் என்று கூறியுள்ளார்.
மேலும் நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவதைவிட்டுவிட்டு விலக்கு வேண்டும் என்று கேட்பது எந்த வகையில் நியாயம் இல்லை என்றும் இந்தியாவின் வேறு எந்த மாநிலமும் நீட் வேண்டாம் என்று சொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார்
மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்கி எந்த பயனும் இல்லை என்றும் பாடங்களை கொஞ்சமாவது புரிந்து படித்தால் தான் அறிவு வளரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
அடுத்த கட்டுரையில்
