ஊரடங்கு நீட்டிப்பு...திரையரங்குகள் செயல்பட அனுமதி !

Written By sinoj
Updated: சனி, 21 ஆகஸ்ட் 2021 (19:42 IST)
தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து  அரசு உத்தரவிட்டுள்ளது.  50% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் தொடங்கப்பட்டது.
.
அதில்,செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரி சுழற்சி முறையில் வகுப்புகளை தொடங்கவுள்ளதாகவும், பொதுமக்களுக்கு கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி எனவும், பூங்காக்கள்,நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படுவதாகவும், முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
மேலும், அனைத்துக் கல்லூரிகள் செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் செயல்பட அனுமதி எனவும், பள்ளிகளில் 9,10,11, 12, ஆம் வகுப்புகளுக்கு மாணவர்களுடன் சுழற்சி முறையில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி அளித்துள்ளது. அதேபோல், இரவு 9 மணிவரை செயல்பட்டு வந்த கடைகள் இனி இரவு 10 மணி வரை செயல்படலாம் எனவும், கேள்விக்கஈ விடுதிகள், தங்குகள் விடுதிகள், மதுக்கூட்டங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

நீட் வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை.. ரூ.10 கோடி அபராதம்: பிரதமர் மோடி

இன்னொரு அதிமுக விக்கெட் விழுந்தது.. சிங்கை ராமச்சந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு..!

இனி பிளிகார்டில் சாப்பாடும் கிடைக்கும்.. தனி செயலி அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்...!

நண்பர்கள் கிண்டல்!.. 10 லட்சம் செலவு பண்ணி தாடி மாற்று அறுவை சிகிச்சை செய்த நபர்!...

Swiggy, Zomato மூலம் வரும் இலவச உணவுகள்!.. டெல்லி போராட்டத்தில் மனித நேயம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments